TNPSC Thervupettagam

ஐ.நா. குடியேற்ற ஒப்பந்தம் 2018

December 16 , 2018 2076 days 585 0
  • பாதுகாப்பான, முறையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட குடியேற்றத்திற்கான உலகளாவிய உடன்படிக்கையானது இந்தியா உள்ளிட்ட 164 நாடுகளால் சர்வதேச அரசுகளுக்கிடையேயான மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்த மாநாடானது மொராக்கோவின் மரக்கேஷ் என்ற இடத்தில் ஐ.நா. பொதுச் சபையின் ஆதரவுடன் நடைபெற்றது.
  • இந்த மாநாடு மொராக்கோவின் அரசால் நடத்தப்பட்டது.
  • இது சர்வதேச குடியேற்றத்தின் பரந்த அளவிலான பரிமாணங்களை உள்ளடக்கிய, அரசுகளுக்கிடையேயான முதல் ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவால் எதிர்க்கப் பட்டாலும் அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இது அனைத்து அரசுகளின் இறையாண்மையையும் முழுமையாக மதிக்கும் ஒரு கூட்டுறவு கட்டமைப்பு கொண்ட மற்றும் கட்டாயமாக்கப்படாத ஒரு ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்