ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் ஒடிசாவின் பழங்குடியினர் பற்றிய கலைக் களஞ்சியத்தை வெளியிட்டார்.
இது ஐந்து தொகுதிகளைக் கொண்டுள்ளது
பழங்குடிச் சமூகங்கள் பற்றிய கலைக்களஞ்சியத்தைத் தொடங்கி அவர்களின் வரலாறு மற்றும் தனித்துவமான பாரம்பரியங்களை ஆவணப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
இந்த கலைக்களஞ்சியமானது பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCSTRTI) மற்றும் ஒடிசா மாநிலப் பழங்குடியினர் அருங்காட்சியகம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டது.
ஓடிஸா மாநிலத்தில் வேகமாக மாறி வரும் பழங்குடிச் சமூகங்களின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதே இந்நூலின் நோக்கமாகும்.
ஒடிசாவின் மொத்த மக்கள்தொகையில் 22.85 சதவிகிதம் பழங்குடியினர் என்பதோடு அம்மாநிலத்தில் 62 வகை பழங்குடியினர் வசிக்கின்றனர்.
இந்த மாநிலமானது, இந்தியாவிலேயே பல்வேறு வகையான பழங்குடி சமூகங்களைக் கொண்டுள்ளது.