ஒடிசாவில் உள்ள ‘பிராமணி இயற்கை வளைவினை’ ஒரு புவிசார் பாரம்பரியத் தளமாக அறிவிப்பதற்கு இந்தியப் புவியியல் ஆய்வு மையம் முன்மொழிந்துள்ளது.
இது ஒடிசாவின் சுந்தர்கர் வனப் பிரிவின் கனிகா மலைத் தொடரில் அமைந்துள்ளது.
அவ்வாறு அறிவிக்கப்பட்டால், புவிசார் பாரம்பரியக் குறியீட்டினைப் பெற்ற நாட்டின் மிகப்பெரிய இயற்கை வளைவாக இது இருக்கும்.
இந்த இயற்கை வளைவு என்பது காம்தி நில அமைப்பின் மேல்நிலையில் உள்ள இரும்பு ஆக்சைடு சார்ந்த (ஃபெருஜினஸ்) மணற்கற்களால் ஆனது.
இது 184 முதல் 160 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடையூழி ஜுராசிக் காலம் முதல் இடையூழி ஜுராசிக் காலம் வரையிலானதாகும்.
இது மட்டுமல்லாமல் திருப்பதியில் உள்ள திருமலை மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய இடங்களில் இந்தியாவில் மேலும் இரண்டு இயற்கை வளைவுகள் உள்ள நிலையில் அவை இரண்டும் சுந்தர்கார் என்னுமிடத்தில் உள்ளதை விட சிறியவை ஆகும்.