உயர் அச்சுறுத்தல் நிலையில் உள்ள “கரியால்” (gharials) முதலை இனங்களின் எண்ணிக்கையை, அதன் இயற்கை வாழிடங்களில் அதிகப்படுத்துவதற்கான தனது முயற்சியை ஒடிசா அரசு புதுப்பித்துள்ளது.
இது கதிர்வழி அலைசெலுத்துக் கருவி பொருத்தப்பட்ட 5 முதலைகளை மகாநதியின் சத்கோசி பள்ளத்தாக்கிற்குள் விடுவித்துள்ளது.
கடல் முதலைகள் மற்றும் மற்ற முதலைகளுடன் ஒப்பிடும்போது, கரியால் முதலை மிக நீண்ட மற்றும் குறுகிய முன்மூக்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் மூன்று வகை முதலை இனங்கள் காணப்படுகின்றன. அவையாவன
கரியால் (ஆற்று நீர் முதலை)
உவர்நீர் முதலை
சதுப்பு நில முதலை
இந்த மூன்று முதலை இனங்களையும் கொண்டுள்ள ஒரே இந்திய மாநிலம் ஒடிசா ஆகும்.