இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் 1817 ஆம் ஆண்டில் நடைபெற்ற பைக்கா கிளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
பைக்கா நினைவகமானது பைக்கா கிளர்ச்சியின் 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும்.
இது ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள பருனேய் மலையில் அமைய இருக்கின்றது.
பைக்கா கிளர்ச்சி பற்றி
குர்தாவின் கஜபதி மன்னரின் (பூரிக்கு அருகிலுள்ள ஒரு இராஜ்ஜியம்) போராளி இராணுவத்தின் பரம்பரைத் தலைவரான பாக்ஸி ஜகபந்து என்பவரின் தலைமையில் பைக்கா இன மக்கள் 1817 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இது 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு முந்தைய, காலனித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு எழுச்சியாகும்.