ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதியன்று ஒடிசா பேரிடர் தயார்நிலை நாள் மற்றும் பேரிடர் குறைப்புக்கான தேசிய தினம் அனுசரிக்கப் படுகிறது.
இது தொடர்பாக ஒரு கண்காட்சி தொடங்கப் பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு “சூப்பர் சூறாவளி” என்ற சூறாவளி ஏற்படுத்திய அழிவை நினைவு கூறுவதற்கும் எதிர்காலப் பேரழிவுகளுக்கு நம்மை தயார்படுத்துவதற்கும் இந்நாள் அனுசரிக்கப் படுகின்றது.
2019 ஆம் ஆண்டிற்கான ஒடிசா பேரிடர் தயார்நிலை தினத்தின் கருப்பொருள் ‘பேரிடர் எதிர்திறனுக்காகச் சமூகத்தை மேம்படுத்துதல்’ என்பதாகும்.