ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனித்துவம் மிக்க ஒரு வெள்ளப் பேரிடர் வரைபடத்தை வெளியிட்டார்.
இது சிறந்த முறையில் வெள்ள மேலாண்மையை மேற்கொள்ள அந்த மாநிலத்திற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வரைபடமானது 2011-ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தின் மூலம் வெள்ளப் பெருக்கு ஏற்படும் பகுதிகள் குறித்த தரவுகளைக் கொண்டிருக்கும்.
ஒடிசாவிற்கான வெள்ளப் பேரிடர் மண்டலம் மீதான ஆய்வை ஹைதராபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Space Research Organisation - ISRO) தேசியத் தொலைதூர உணர்வு மையம் மேற்கொண்டது.