- 2012 ஆம் ஆண்டு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வன்புணர்வு வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக 45 விரைவு நீதிமன்றங்களை அமைக்க இருப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாலும், வழக்குகளை விரைவான முறையில் தீர்ப்பதற்கான அவசியத்தினாலும் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
விரைவு நீதிமன்றங்களைப் பற்றி
- 11வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.