ராஜஸ்தான் மாநில அரசானது தனது 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ‘ஒட்டகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கொள்கையை’ அறிவித்துள்ளது.
அம்மாநில அரசின் புள்ளிவிவரங்களின் படி, ராஜஸ்தானில் இரண்டு லட்சத்திற்கும் குறைவான ஒட்டகங்களே உள்ளன.
மேலும், 2012 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் உள்ள ஒட்டகங்களின் எண்ணிக்கை 1.5 லட்சம் வரை குறைந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டக் கணக்கெடுப்பின்படி சுமார் 2.5 லட்சம் ஒட்டகங்கள் இருந்தன.
ஒரு பெரிய மக்கள் சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு ஒட்டகங்கள் ஆற்றும் பங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 22 அன்று உலக ஒட்டக தினம் அனுசரிக்கப்படுகிறது.