சிம்லா காவல்துறை ‘ஒரு நிமிடப் போக்குவரத்து விளக்கு’ எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தனது மாநிலத் தலைநகரை நெரிசல் இல்லாததாக மாற்றவும், பயண நேரத்தைப் பாதிக்கு மேல் குறைக்கவும், முக்கிய இடங்களில் 10 போக்குவரத்து விளக்குகளை அமைக்கவும் இத்திட்டம் முன்மொழிகிறது.
முன்மொழியப்பட்ட இந்த அமைப்பின் கீழ் ஒவ்வொரு நிமிடமும் 40:20 மற்றும் 30:30 வினாடிகள் என்ற விகிதத்தில் போக்குவரத்து சமிக்ஞை வெளியிடப்படும்.
இதன் பொருள், உச்சக்கட்ட நெரிசல் நேரங்களின் போது வாகனங்கள் 40 வினாடிகள் நிறுத்தப் பட்டு பிறகு அடுத்த 20 வினாடிகளுக்கு விடுவிக்கப் படும்.
சாதாரண நேரங்களில் அவை 30 வினாடிகள் நிறுத்தப்பட்டுப் பிறகு 30 வினாடிகள் விடுவிக்கப் படும்.
புதிய போக்குவரத்து முறையின் கீழ் வாகனங்கள் நிறுத்தப்படும் குறைந்தபட்ச தூரம் 500 மீட்டராக இருக்கும்.