2025 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் பல பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் (RRBs) ஒன்றிணைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்த RRB வங்கிகள் ஆனது அவற்றின் பல சொத்துக்கள், அதிகாரங்கள், உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளைப் பெற்று ஒரே நிறுவனமாக ஒன்றிணைக்கப்படும்.
மிகப்பெரியப் பொதுத்துறை கடன் வழங்குநரான பாரத் ஸ்டேட் வங்கியானது (SBI), அதிக எண்ணிக்கையிலான RRB வங்கிகளுக்கு (14) நிதியுதவி வழங்குகிறது, அதைத் தொடர்ந்து பஞ்சாப் தேசிய வங்கி (9) மற்றும் கனரா வங்கி (4) ஆகியவற்றிற்கு நிதி அளிக்கிறது.
மாநிலங்களில், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று RRB வங்கிகள் உள்ளன.
RRB வங்கிகள் ஆனது 2024 ஆம் நிதியாண்டில் 7,571 கோடி ரூபாய் என்ற மிக அதிகபட்ச ஒருங்கிணைந்த நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளன.