வருமானம் ஈட்டலுக்கான வழிக்காட்டுதல் முன்னெடுப்பு (P2E) எனப்படும் உலகளாவிய கல்வி முதல் வருமானம் ஈட்டல் வரையிலான தீர்வு முறை திட்டமானது, இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இளையோர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
இது யுனிசெஃப் அமைப்பினால் தொடங்கப்பட்ட இயங்கலை வழிப் பயிற்சி திட்டம் ஆகும்.
வேலை மற்றும் வாழ்க்கை தொடர்பான திறன்களைப் பெற அவர்களுக்கு உதவுவதற்கான ஒரு முக்கியப் படிநிலையை இது குறிக்கிறது.
இந்தியாவில் P2E கல்வித் திட்டங்கள் மூலம் பயனடைந்த இளம் நபர்களில் 62 சதவீதம் பேர் வளர் இளம்பெண்கள் மற்றும் இளம் வயது பெண்கள் ஆவர்.
P2E முன்னெடுப்பானது எண்ணிம ஆக்கத் திறன், நிதியியல் கல்வியறிவு, வேலை வாய்ப்பிற்கான திறன்கள் மற்றும் பிற தேவைக்கேற்ற, வேலைவாய்ப்புப் பெற தேவையான திறன்களுக்கான சான்றிதழ் கல்விப் படிப்புகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.