TNPSC Thervupettagam

ஒற்றை முறையில் அதிக அளவிலான குழு முறை கொண்ட சோதனை – கட்டுப்பாடுகள் 

April 28 , 2020 1547 days 529 0
  • கோவிட் – 19 தொற்றுப் பரவல் 5%ற்கும் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே ஒற்றை முறையில் அதிக அளவிலான குழு முறை கொண்ட சோதனை நடத்தப்படும் (Pooled Testing) என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR - Indian Council of Medical Research) அறிவித்துள்ளது.
  • மேலும் ICMR ஆனது இந்தச் சோதனை முறையில் 5 மாதிரிகளுக்கு மேல் ஒன்றாக கலக்கப்பட்டு மேற்கொள்ளப் படாது என்று அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் இதுவரை Pooled Testing முறையானது அந்தமான் நிக்கோபர் தீவுகள், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
  • Pooled Testing முறையை ஏற்றுக் கொண்ட முதலாவது ஒன்றியப் பிரதேசம் அந்தமான் நிக்கோபர் தீவாகும்.  இந்த முறையை ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும்.
  • இந்த முறையானது இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியில் வெற்றி பெற்றுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்