TNPSC Thervupettagam

ஒலிம்பிக் சுடர் 2020

March 13 , 2020 1592 days 568 0
  • கிரீக் நாட்டில் உள்ள பண்டைய ஒலிம்பியாவில் 2020 ஆம் ஆண்டின் டோக்கியோ விளையாட்டுக்கான ஒலிம்பிக் சுடரானது ஏற்றப்பட்டது.
  • கிரேக்க ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அன்னா கோரகாக்கி என்பவர் ஆரம்பத்தில் இந்தச் சுடரைத் தாங்கிச் சென்றார். ஒரு பெண் இந்தச் சுடரைத் தாங்கிச் செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
  • ஜப்பான், அதிலும் குறிப்பாக டோக்கியோ நகரம் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இரண்டாவது முறையாகும்.
  • இந்த நாடு (டோக்கியோ) இதற்கு முன்பு முதல்முறையாக 1964 ஆம் ஆண்டில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது.
  • கோடைக்கால விளையாட்டுகளை இரண்டு முறை நடத்தும் ஆசியாவின் முதலாவது நகரமாக டோக்கியோ உருவெடுத்துள்ளது.
  • ஒட்டுமொத்தமாக, இது ஜப்பானில் நடைபெறும் நான்காவது ஒலிம்பிக் போட்டியாகும். இது 1972 (சப்போரோ) மற்றும் 1998 (நாகானோ) ஆகிய ஆண்டுகளில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்