TNPSC Thervupettagam

ஓட்டோலித் வளையங்கள்

May 10 , 2024 69 days 153 0
  • மீன்களின் காதில் அறிவியலாளர்கள் மர வளையங்களைப் போல ஆய்வு செய்யும் வகையிலான ஒரு வகையான கல் (செவிக்கல்) உள்ளது.
  • இந்தக் கற்களில் உள்ள வேதிப் பொருட்கள் மீன்கள் உயிருடன் இருக்கும் போது எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்தியது என்பதை மதிப்பிட ஆராய்ச்சியாளர்கள் ஒரு வழியைக் கண்டறிந்துள்ளனர்.
  • அவை நீலத்தூவி சூரை மீனை (புளூஃபின் டுனா) பருவநிலை நெருக்கடியிலிருந்துக் காக்க உதவும்.
  • உயரும் வெப்பநிலையானது இளம் நீலத்தூவி சூரை மீன்களின் வளர்சிதை மாற்ற விகிதங்களை வெகுவாகப் பாதிக்கிறது, குறிப்பாக அவற்றின் ஆற்றல் பயன்பாட்டைப் பாதிக்கிறது.
  • ஓட்டோலித் என்பது மீன்களின் காதில் உள்ள ஒரு கல் போன்ற கட்டியாகும்.
  • ஓட்டோலித் வளையங்கள், மர வளையங்களைப் போலவே, மீனின் வயதை அறியப் பயன்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்