சிங்கப்பூர் அரசானது, திருமணம் என்ற வார்த்தையின் வரையறையைப் பாதுகாக்கும் காலனித்துவ காலத்துச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் ஆண்களுக்கு இடையே ஏற்படும் ஓரினச் சேர்க்கை/ஒரு பாலின ஈர்ப்பினை குற்றமற்ற நடவடிக்கையாக அறிவித்தது.
இதற்கு முன்பாக சிங்கப்பூர் தண்டனைச் சட்டத்தின் 377A என்ற ஒரு பிரிவின் கீழ், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவானது இயற்கைக்கு மாறான சில குற்றங்களை வரையறுக்கிறது.
2018 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் நவ்தேஜ் சிங் ஜோஹர் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் ஒருமனதாக 377வது பிரிவினை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி உள்ளது.