TNPSC Thervupettagam

கங்கை நீர் பற்றிய CPCB அறிக்கை

February 21 , 2025 10 hrs 0 min 47 0
  • தேசியப் பசுமை தீர்ப்பாயம் (NGT) ஆனது, பிரயாக்ராஜில் உள்ள கங்கை மற்றும் யமுனை ஆகிய நதிகளில் அதிக மலக்குடற் பற்றுயிரி பாக்டீரியாக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) அறிக்கையானது, பிரயாக்ராஜ் நதி சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள இரு நதிகளின் ஊடே பல்வேறு இடங்களில் அதிக அளவு மலக் குடற் பற்றுயிரி பாக்டீரியாக்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
  • மனிதரின் அல்லது கால்நடைகளின் கழிவுகள் கலப்பதால் அந்த நதிகளின் நீரில் மலக் குடற் பற்றுயிரி கலப்பு ஏற்படுகிறது.
  • இந்தப் பாக்டீரியாக்களின் அளவுகள் அடன்கு நீரின் தரத்தைக் குறிப்பதோடு, நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்காணிக்க உதவுகிறது.
  • கங்கையில் உள்ள மொத்த மலக்குடற் பற்றுயிரி பாக்டீரியாக்களின் அளவுகள் (மலம் மற்றும் பிற) எப்போதும் காணப்படும் அளவை விட 1,400 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
  • அவை யமுனை மற்றும் பிரயாக்ராஜ் நதியின் சில இடங்களில் 660 மடங்கு அதிகமாக இருந்தன.
  • 2004 ஆம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட குழுவானது, மலக் குடற் பற்றுயிரி ஆனது 500 MPN/100ml என்ற ஏற்கத் தக்க வரம்பில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்