மலைப்பாதையில் இருசக்கர வாகனம் ஓட்டும் ஒரு வீராங்கனையான கஞ்சன் உகுர்சான்டி இமாலய மலைப்பகுதியின் வடக்குப் பகுதியில் அமைந்த 18 கணவாய்கள் வழியேயான உலகின் முதலாவது தனிநபர் மோட்டார் சைக்கிள் பயணத்தை டெல்லியில் நிறைவு செய்தார்.
உகுர்சான்டி உம்லிங்லா கணவாயில் பயணித்த முதல் தனிநபர் பெண் வாகன ஓட்டியாகவும் ஆகியுள்ளார்.
மேலும், அவர் 18 கணவாய்களிலும் தனியாகப் பயணித்த முதல் பெண்மணியாகவும் உருவெடுத்து உள்ளார்.
மேலும் புதுடெல்லி – மணாலி – லே – உம்லிங்கா – டெல்லி வரையிலான 3,187 கி.மீ. தூரத்தினை ஒரே வீச்சில் பயணித்த முதல் பெண்மணியும் இவரே ஆவார்.