மருத்துவம் மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக வேண்டி கஞ்சாப் பயிர்களை கட்டுப்படுத்தப் பட்ட முறையில் பயிரிடுவது குறித்து இரண்டு பல்கலைக்கழகங்கள் நடத்திய ஒரு சோதனை ஆய்விற்கு இமாச்சலப் பிரதேச மாநில அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீரில் ஏற்கனவே, அத்தகைய சாகுபடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைத் திட்டம் வெற்றியடைந்தால், கட்டுப்படுத்தப்பட்ட கஞ்சாப் பயிர்ச் சாகுபடியை அனுமதிக்கும் நான்காவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறும்.
அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் இத்தகைய சாகுபடியினை அனுமதிக்கின்றன.
இது குறைந்தபட்ச அளவில் போதையூட்டும் பண்புகளைக் கொண்ட குறிப்பிட்ட கஞ்சா வகைகளின் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான கடுமையான கண்காணிப்புடன் கூடிய சாகுபடி முறையாகும்.
இந்தியாவில் கஞ்சாப் பயிர் சாகுபடியானது பெரும்பாலும் அதன் மிகவும் மோசமான மனோவியல் பண்புகள் காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு பல்வேறு போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் (NDPS) சட்டத்தின் 2வது பிரிவானது, கஞ்சா பிசின் மற்றும் பூக்களின் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்கிறது.
2018 ஆம் ஆண்டில் கட்டுப்படுத்தப்பட்ட கஞ்சாப் பயிர் சாகுபடியை அனுமதித்த முதல் மாநிலம் உத்தரகாண்ட் ஆகும்.