இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு (FICCI) மற்றும் கடத்தல் மற்றும் பொருளாதாரத்தை மோசமாக அழிக்கும் கள்ளநோட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான குழு (CASCADE) ஆகியவை இணைந்து இந்த நாளை அனுசரிக்கின்றன.
பன்னாட்டுக் கடத்தலின் அச்சுறுத்தல் மற்றும் அதன் சாத்தியமானத் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
கடந்த ஆண்டில், கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருந்து 12,298 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், 177 கிலோ தங்கம் மற்றும் 179 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப் பட்டன.
கூடுதலாக, 3.27 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போலி இந்தியப் பணத்தாள்களும் (FICN) பறிமுதல் செய்யப்பட்டன.