TNPSC Thervupettagam

கடற்நிலப் பாலத்தின் மேல் முதல் விமான ஓடுதளம்

December 25 , 2017 2399 days 734 0
  • கடற்கரை மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் Roller-compacted concrete (RCC) கட்டுமான பொருட்கள் மூலம் விமான ஓடுதளம் அமைத்து லட்சத்தீவின் அகத்தி விமான நிலையத்தை விரிவாக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (Airports Authority of India) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • கடற் நீரினால் சூழப்பட்ட தொடர்பற்ற இரு தனித்தனி  நிலப்பகுதிகள் RCC கட்டுமான அமைப்புகளால் நிலப்பாலம் போல்  இணைக்கப்பட்டு அவற்றின்மேல்  ஏற்கனவே உள்ள நீண்ட ஓடுதளம் விரிவுப்படுத்தப்படும்.
  • இத்தகு நீண்ட விமான ஓடு பாதையின் மூலம் பெரும் ATR வகை விமானங்களையும் இத்தீவில் இயக்க இயலும்.
  • கடற் நிலப் பாலத்தின் மீது வெற்றிகரமாக விமான ஓடு தளம் அமைக்கப்பட உள்ளது இந்தியாவில் இதுவே முதன்முறையாகும்.
  • தற்போது இவ்விமான நிலையத்தில் சிறு டர்போ விமானங்கள் (Turbo Props) மட்டுமே இயங்குகின்றன.
  • இந்த விமான ஓடுதளம் கட்டிமுடிக்கப்பட்டால் இவற்றில் பெரிய ATR-72 விமானங்களை இயக்க இயலும்.
  • இதற்கு முன் இதே போன்ற திட்டம் மும்பையின் ஜூஹீ (Juhu) விமான நிலையத்திலும், இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு (Kullu) விமான நிலையத்திலும் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் அவை அவ்விடத்திற்கு பொருத்தமில்லாததாக இருந்ததன் காரணமாக கைவிடப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்