தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் லிமிடெட் என்ற நிறுவனமானது தென்கிழக்கு ஆசியா-மத்திய ஆசியா-மேற்கு ஐரோப்பா – 6 கடலடி கம்பிவடக் கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதனுடைய அதிவேக உலகளாவிய இணையக் கட்டமைப்புத் திறனை மேம்படுத்தச் செய்வது மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தேவையை நிவர்த்தி செய்வது போன்றவற்றிற்கான முயற்சியில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இது கம்பிவட அமைப்பின் ஒட்டு மொத்த முதலீட்டில் 20% முதலீட்டினை வழங்க உள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் மூலம் ஏர்டெல் நிறுவனம் தனது உலகளாவிய இணையக் கட்டமைப்பில் 100 TBPS இணையத் திறனை இணைக்க இயலும்.
அந்தத் தொலைத் தொடர்பு நிறுவனமானது SEA-ME-WE-6 கம்பிவட அமைப்பினை மும்பை மற்றும் சென்னை ஆகிய புதிய நிலையங்களில் நிறுவ உள்ளது.