கடல் சூழல் அமைப்புகள் தொடர்பான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற இருக்கின்றது.
இந்த மாநாடானது இந்திய கடல் உயிரியல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது.
இந்திய கடல் உயிரியல் சங்கமானது 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் கடல் அறிவியல் பற்றிய ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு உதவுகின்றது.