இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் ஆனது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று "வெகுஜன மதமாற்றத்தை" தடை செய்யும் ஒரு மசோதாவை நிறைவேற்றியது.
2022 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசச் சமயச் சுதந்திரத் திருத்த மசோதாவானது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன் 2019 ஆம் ஆண்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டக் கட்டாயப்படுத்துதல் அல்லது ஈர்ப்பு நடவடிக்கைகள் மூலம் மதம் மாறுவதற்கு எதிராக, அதிகபட்சத் தண்டனையை இந்த மசோதா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்துகிறது.
2019 ஆம் ஆண்டு சட்டத்தில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மதமாற்றம் செய்வதைக் குறிப்பிடும் "வெகுஜன மதமாற்றம்" என்ற குறிப்பை இந்த மசோதா உட்சேர்த்தது.
கட்டாய மதமாற்றங்களுக்கானத் தண்டனையை ஏழு ஆண்டுகளில் இருந்து அதிக பட்சமாக 10 ஆண்டுகளாக அதிகரிக்க இந்த மசோதா முன்மொழிகிறது.