சமீபத்தில் அமெரிக்க விண்வெளி வீராங்கனை மற்றும் கடல் ஆய்வு நிபுணரான கத்தி சல்லீவன் என்பவர் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியான சேலஞ்சர் முனை ஆழப் பகுதியை அடைந்தார்.
இதன் மூலம் புவியில் மிக ஆழமான பகுதியை அடைந்த முதலாவது பெண்மணியாக இவர் உருவெடுத்துள்ளார்.
1984 ஆம் ஆண்டில், இவர் தனது முதலாவது விண்வெளி நடைப் பயணத்தை மேற்கொண்டார். இவர் விண்வெளியில் நடந்த முதலாவது பெண்மணியாக அப்போது உருவெடுத்துள்ளார்.
தற்பொழுது சேலஞ்சர் முனை ஆழப் பகுதியை அடைந்ததன் மூலம், விண்வெளியில் நடந்த முதலாவது பெண்மணி மற்றும் புவியில் ஆழமான பகுதியை அடைந்த முதலாவது பெண்மணி என்ற இரண்டு சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
பெருங்கடலில் மிகவும் ஆழமான பகுதியை அடைந்த முதலாவது பெண்மணியாகவும் இவர் உருவெடுத்துள்ளார்.
சேலஞ்சர் முனை ஆழப் பகுதியானது மரியானா ஆழியின் தெற்குப் பகுதியில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
இது மைக்ரோனேசியக் கூட்டாட்சி நாடுகளின் பெருங்கடல் பகுதியில் அமைந்து உள்ளது.