1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாட்டு மற்றும் ஒழுங்கு முறை) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கியமாக லித்தியம், தங்கம், வெள்ளி, தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களின் ஆய்வில் கவனம் செலுத்துவதோடு, நாட்டில் கனிம ஆய்வு மற்றும் மேம்பாட்டினை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள், 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது திருத்தத்தினைக் குறிக்கின்றன.
இந்தத் திருத்தம் ஆனது கனிம வளங்களை வெளிக் கொணர்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினைப் பறைசாற்றுகிறது.
அவையாவன
லித்தியம் மற்றும் ஆழ்பகுதியில் காணப்படும் தாதுக்கள் குறித்த ஆய்வுகளை அதிகப் படுத்துதல்
ஏலத்தின் மூலம் ஆய்வு உரிமம் வழங்குதல்
புதிய அட்டவணையில் குறிப்பிடப்பட்ட கனிமங்களைச் சேர்த்தல்