நாட்டின் முதலாவது மக்களவையின் உறுப்பினரும் முந்தைய டும்ரான் ராஜின் (ஒரு ஜமீன்தாரி மாநிலம்) கடைசி மகாராஜாவுமான கமல் சிங் என்பவர் பீகாரில் உள்ள பக்சார் மாவட்டத்தில் காலமானார்.
கமல் சிங் என்பவர் 1952 ஆம் ஆண்டில் தனது 25வது வயதில் இந்தியாவின் முதலாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இவர் 1962 ஆம் ஆண்டு வரை சுயேட்சையாக லோக் சபாவில் பக்சார் நாடாளுமன்றத் தொகுதியை (பீகார்) பிரதிநிதித்துவப் படுத்தினார்.
பழமையான ஷாஹாபாத் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு ஏராளமான கல்விக் கூடங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களை அவர் திறந்து வைத்துள்ளார்.