நேபாளத்தைச் சேர்ந்த மலையேறும் வீரரான கமி ரீட்டா ஷெர்பா (52 வயது) அவர்கள் உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் 25வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தை பல முறை ஏறியதற்கான தனது சொந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டில் 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
இவர் 1994 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.