கய்லா முல்லர் நடவடிக்கை என்ற அதிகாரப்பூர்வ குறியீட்டுப் பெயர் கொண்ட பாரிஷா என்ற அதிரடிச் சோதனையானது அமெரிக்காவின் ஒரு இராணுவ நடவடிக்கையாகும்.
இது இஸ்லாமிய அரசான ஈராக் மற்றும் சிரிய பயங்கரவாத அமைப்பின் அப்போதையத் தலைவரும் "கலீபா" என்று சுயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டவருமான அபுபக்கர் அல் பாக்தாதியைக் கைது செய்வதற்காக அல்லது அவரைக் கொல்லுவதற்காக சிரியாவின் பாரிஷாவில் நடத்தப்பட்டது.