கடற்படைத் தலைவரான அட்மிரல் கரம்பீர் சிங் 24வது கடற்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு அட்மிரல் சுனில் லம்பா கடற்படைத் தலைமைத் தளபதியாக இருந்தார்.
விசாகப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கடற்படையின் கிழக்குக் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரியாக (தளபதியாக) அட்மிரல் கரம்பீர் பணியாற்றினார்.
தலைமைத் தளபதியின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் அல்லது 62 வயதைப் பூர்த்தி செய்யும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரையில் அப்பதவியில் அவர் இருப்பார்.