கரீபியனில் எரிமலை வெடிப்பிலிருந்து (La Soufriere volcano eruption) சல்பர் டை ஆக்சைடு (SO2) என்ற உமிழ்வானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று இந்தியாவை அடைந்தது.
இது நாட்டின் வடக்குப் பகுதிகளில் மாசின் அளவை அதிகரித்து அமில மழையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தைத் தூண்டி உள்ளது.
இதை உலக வானிலை அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
பூமியின் வளிமண்டலத்தின் இரண்டாவது அடுக்கான படையடுக்கு மண்டலத்தில் சல்பேட் தூசிப் படலத் துகள்கள் (sulphate aerosol particles) நுழைந்ததற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஏரோசோல்கள் சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சைப் பிரதிபலித்து மீண்டும் அதை விண்ணிற்கு அனுப்பி, பூமியின் கீழடுக்கு மண்டலத்தைக் குளிர்விக்கின்றன.
புதைபடிவ எரிபொருட்களை மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற தொழில்துறை நிறுவனங்கள் எரிப்பதே வளிமண்டலத்தில் SO2 வெளிப்படுவதற்கு ஒரு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.