கருப்பு இனத்தவர் போராட்டம் என்பது கருப்பு இன மக்களை நோக்கிய வன்முறை மற்றும் இனப் பாகுபாட்டிற்கு எதிரான ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கப் போராட்டமாகும் அல்லது (இயக்கமாகும்).
இந்த இயக்கமானது அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் கொல்லப்படுதல், காவல்துறை அத்துமீறல், இனம் சார்ந்து ஒதுக்கப்படுதல் மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான ஒரு பிரச்சாரமாகும்.
இந்த இயக்கம் 2013 ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்த இயக்கம் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பரவியது.
ஆப்பிரிக்க – அமெரிக்கரான ஜார்ஜ் ப்ளாய்டின் இறப்பைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவிலான ஒரு போராட்டத்தை அமெரிக்கா எதிர் கொண்டு வருகின்றது.