அயல்நாட்டு இனங்களான கருப்பு எலிகள் ஆனது மடகாஸ்கர் நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் பரவும் ஒரு கொடிய வைரஸின் ஓம்புயிரியாக உள்ளது.
மனிதர்களில் கடுமையான ஒரு நோயை ஏற்படுத்தக் கூடிய ஹன்டா வைரஸ் ஆனது, பொதுவாகப் பாதிக்கப்பட்ட கொறித் துண்ணிகளின் சிறுநீர் அல்லது கழிவுகளுடன் மனிதர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.
முதலில் ஆசியாவில் இருந்து இந்தப் பகுதிக்குள் ஊடுருவிய இக்கருப்பு எலியானது, 10 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மடகாஸ்கர் பகுதிகளில் பரவியது.
பொதுவாக வேளாண் நிலங்களில் காணப்படுகின்ற இந்த எலிகள் வீடுகளில் காணப் படுவதில்லை.