TNPSC Thervupettagam
April 17 , 2023 461 days 236 0
  • எண்டோமெட்ரியோசிஸ் நிலையினை மிகவும் நம்பகமான முறையில் கண்டறியச் செய்வதற்கான ஒரு இரத்தப் பரிசோதனை முறையினை டாட்லேப் என்ற அமெரிக்க நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
  • எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை அகப்படலம்) என்பது உலகளவில் 10% அளவிலான பெண்களைப் பாதிக்கும் ஒரு  உடல் பலவீன நிலையாகும்.
  • எண்டோமெட்ரியோசிஸ் என்பது ஒரு வலி மிகுந்த நாள்பட்ட நோயாகும் என்பதோடு,  இதில் கருப்பையின் அகணி அல்லது எண்டோமெட்ரியம் போன்ற பல திசுக்கள் கருப்பைக்கு வெளியே வளரும்.
  • இதுவரையில், இதற்கான நோயறிதலுக்காக என்று மக்கள் சராசரியாக 6.7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
  • எண்டோமெட்ரியோசிஸ் நிலைப் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை உலகளவில் 190 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் மட்டும் சுமார் 42 மில்லியன் பேர் எண்டோமெட்ரியோசிஸ் நிலையினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்