இந்திய உச்ச நீதிமன்றம் 15 அதிருப்தி சட்டசபை உறுப்பினர்களை நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடரிலிருந்து வெளியேற அனுமதி வழங்கியுள்ளது.
இது அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் பிரிவு 2(b)-ன் கீழ் இந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அச்சமின்றி ஒரு “கொறடாவின் உத்தரவை” மறுக்க முடியும் என்பதைக் குறிக்கின்றது.
கட்சிக் கொறடா
ஒரு கொறடா உத்தரவு என்பது ஒரு முக்கியமான வாக்கெடுப்புக்கு கட்சி உறுப்பினர்கள் ஆஜராக வேண்டும் அல்லது அவர்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பதற்கான ஒரு எழுதப்பட்ட உத்தரவாகும்.
“கொறடா உத்தரவை” வழங்குவதற்காக, அவையில் உள்ள தங்களது கட்சி உறுப்பினர்களில் மூத்த உறுப்பினரை “தலைமைக் கொறடாவாக” அரசியல் கட்சிகள் நியமிக்கின்றன.