TNPSC Thervupettagam

கல்ப சுவர்ணா

March 24 , 2024 117 days 174 0
  • மத்தியத் தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CPCRI)  ஆனது, ‘கல்ப சுவர்ணா’ என்ற புதிய குட்டை ரக தேங்காய் ரகத்தினையும், இரண்டு புதிய கலப்பின கோக்கோ ரகங்களையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அறிமுகப்படுத்தப்பட்ட கோக்கோ ரகங்களில் ஒன்று, கர்நாடகா மற்றும் கேரளாவின் அதிக மழைப்பொழிவு மிக்க பகுதிகளில் அதிகமாக காணப்படும் நெற்று கரும்புள்ளி அழுகல் நோய்த் தாக்குதலை எதிர்க்கும் திறன் கொண்டது.
  • 'கல்ப சுவர்ணா’ ரகம் ஆனது இளநீர் மற்றும் கொப்பரை தேங்காய் உற்பத்திக்கு ஏற்றது.
  • VTL CH I மற்றும் VTL CH II எனப்படும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கோக்கோ வகைகள் அதிக கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன.
  • VTL CH I ரகமானது அதிக மகசூல் தரக்கூடியது என்பதோடு இதனைப் பாக்கு மற்றும் தென்னைத் தோட்டங்களில் ஊடு பயிராகவும் பயிரிட இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்