TNPSC Thervupettagam

கல்வி சீர்திருத்தங்கள் - அமைச்சரவை அனுமதி

April 1 , 2018 2303 days 655 0
  • நாட்டில் பள்ளிக் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய கேபினெட் அனுமதியளித்துள்ளது. இச்சீர்திருத்தங்கள், சர்வ சிக்ஸா அபியான் - 2 திட்டத்தில் செய்யப்பட்ட உள்ளன.
  • 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan) மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகிய அனைத்தும் ஒரே திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
  • இந்த ஒருங்கிணைக்கப்பட்டத் திட்டம் ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரை அமலில் இருக்கும். இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.75,000 கோடி (தற்போதைய அளவை விட 20% கூடுதலாகும்) ஆகும்.
  • அரசு, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது கவனம் செலுத்தும்.
  • திறன் பயிற்சி, தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை செயல்பாட்டில் உள்ளது. வரும் நாட்களில் இப்பயிற்சி 6ஆம் வகுப்பு முதல் செயல்படுத்தப்படும். இத்திறன் பயிற்சி மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • அதிக கட்டணம் வசூலிக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண நிதி அளவுகளுடன் (Modest Financial means) வட்டியில்லா கல்விக் கடன்கள் வழங்குதலை அதிகரிப்பதற்கும் கேபினேட் அனுமதியளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்