TNPSC Thervupettagam

கள்ள நோட்டுகள் மீதான தேசிய மாநாடு & அமலாக்க நிறுவனங்களின் பங்கு

March 15 , 2018 2320 days 701 0
  • அமலாக்க நிறுவனங்களின் பங்கு மற்றும் கள்ளநோட்டுகள் மீதான தேசிய மாநாடு அண்மையில் புது டெல்லியில் நடைபெற்றது.
  • அறிவுசார் சொத்துரிமையின் மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கானப்  பிரிவு (CIPAM - Cell for IPR Promotion and Management) ஐரோப்பிய யூனியனுடன் (European Union-EU) இணைந்து இம்மாநாட்டை நடத்தியுள்ளது.
  • இன்னும் மேம்பட்ட வகையில் அறிவுசார் சொத்துரிமையின்  பாதுகாப்பு சூழலமைவை வலுப்படுத்த, புதிய யோசனைகளை வழங்கவும், அதன் மீது   பேச்சுவார்த்தையை நடத்தவும் அறிவுசார் சொத்துரிமை களத்தில் உள்ள   தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களை ஓரே மேடையில் ஒருங்கிணைப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது.

CIPAM

  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் (Ministry of commerce and Industry) தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் (DIPP- Department of Industrial Policy & Promotion) கீழ் செயல்படும் தொழில்முறை அமைப்பே (Professional body) CIPAM ஆகும்.
  • “படைப்பாக்க இந்தியா; புத்தாக்க இந்தியா” (Creative India; Innovative India) என்ற முழக்கத்தோடு (slogan) 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கையை (IPR Policy) திறம்பட அமல்படுத்துவதே CIPAM-ன் முக்கிய பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்