கழிவுகள் உருவாக்கம் மற்றும் அதன் மேலாண்மை குறித்த தேசியப் பதிவு அறிக்கை
August 12 , 2022 709 days 388 0
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது வருடாந்திர அடிப்படையிலான கழிவுகள் உருவாக்கம் மற்றும் அதன் மேலாண்மை குறித்த தேசியப் பதிவு அறிக்கையைத் தயாரித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCB) / மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் (PCC) ஆகியவற்றிலிருந்துப் பெறப்பட்ட வருடாந்திரப் பதிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையானது தயாரிக்கப்படுகிறது.
2019-20 ஆம் நிதியாண்டில் இந்தியா முழுவதும் 3.47 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் உருவாக்கப் பட்டுள்ளது.
நாடு முழுவதும் உற்பத்தியாகும் நெகிழிக் கழிவுகளில் பாதியளவினை மட்டுமே இந்தியா மறுசுழற்சி செய்தது.