“Lady doctors : The Untold Stories of India’s First Women in Medicine” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகமானது கவிதா ராவ் என்பவரால் எழுதப்பட்டதாகும்.
இந்தப் புத்தகமானது வரலாற்றில் அதிகமாக புறக்கணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெண் மருத்துவரின் கதைகளை மீளச் செய்து உரைக்கிறது.
இந்த புத்தகத்தில் ருக்மாபாய் ராவத்தினுடைய கதையானது கூறப்பட்டுள்ளது.
ருக்மாபாய் ஓர் இந்திய மருத்துவர் மற்றும் பெண்ணியவாதி ஆவார்.
இவர் காலனித்துவ இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக அறியப்படுகிறார்.
மேலும் இவர் 1884 மற்றும் 1888 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற தனது குழந்தைத் திருமணம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கிலும் தொடர்புடையவராக இருந்தார்.