சுமார் 2.45 லட்சம் ஆலிவ் ரெட்லி (சிற்றாமைகள்) முட்டையிடுவதற்காக ஒடிசாவின் கடற்கரையினூடே அமைந்துள்ள கஹிர்மாதா கடல்சார் சரணாலயத்தின் நாசி – II என்ற கடற்கரையை வந்தடைந்துள்ளன.
இவை பசிபிக் ரெட்லி கடல் ஆமை (Lepidochelys olivacea - லெபிடோசெலிஸ் ஆலிவாசியே) என்றும் அழைக்கப்படுகின்றன.
இது முதன்மையாக பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வெப்பமான மற்றும் வெப்பமண்டல நீர்ப்பகுதிகளில் காணப்படும் நடுத்தர அளவிலான கடல் ஆமைகள் ஆகும்.
இந்தியப் பெருங்கடலில், ஒடிசாவிலுள்ள கஹிர்மாதா அருகேயுள்ள ருசிகுல்யாஇனப் பெருக்க மையத்தில் இரண்டு அல்லது மூன்று குழுக்களாக ஆலிவ் ரெட்லி ஆமைகள் வலையமைக்கும்.
இந்தியாவின் ஒடிசா மாநிலக் கடற்கரையானது உலகின் மிகப்பெரிய இனப்பெருக்க மையமாகும்.
இதற்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ மற்றும் கோஸ்டா ரிகா ஆகியவை உள்ளன.