குஜராத்தில் உள்ள காக்ரபார் அணுமின் நிலையத்தின் (KAPP-4) நான்காவது அலகு முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
700 மெகாவாட் உற்பத்தி செய்யும் இந்த அலகுகள் இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (NPCIL) மூலம் கட்டமைக்கப்படும் மிகப்பெரிய உள்நாட்டு அணுசக்தி உற்பத்தி உலைகள் ஆகும்.
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து முக்கிய நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததையடுத்து இந்த அணு உலை முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
NPCIL தற்போது 7,480 மெகாவாட் திறன் கொண்ட 23 அணுமின் உலைகளை இயக்கி வருகிறது.