TNPSC Thervupettagam
April 6 , 2020 1569 days 535 0
  • காசநோய் சாதனங்களை கோவிட் – 19 சோதனைகளுக்குப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR - Indian Council of Medical Research) ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • தற்பொழுது, இந்தியா அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுப் பரிந்துரைக்கப்பட்ட, நிகழ்நேர நொதித் தொடர் வினையை (RT-PCR - Real Time-Polymerase Chain Reaction) பயன்படுத்துகின்றது. 
  • இதனுடன், ICMR ஆனது ட்ரூநெட் என்ற சோதனையைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்துள்ளது.”
  • “ட்ரூநெட் சோதனையானது” தற்பொழுது மருந்து எதிர்ப்பு காசநோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றது.
  • “ட்ரூநெட்” என்பது மின்கலத்தினால் இயங்கும் ஒரு சாதனமாகும்.
  • இந்தச் சாதனமானது சில்லுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இது ஒரு சோதனைக்குக் குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் வரை  எடுத்துக் கொள்ளும்.
  • தற்பொழுது இந்தியாவில் 800 ட்ரூநெட் சாதனங்கள் உள்ளன. 
  • இதில் 457 சாதனங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளன.
  • தற்பொழுது, இந்தியா இந்தச் சாதனங்களை இறக்குமதி செய்கின்றது. இந்தச் சாதனங்கள் இந்தியாவில்  தயாரிக்கப் படுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்