காந்தி அமைதிப் பரிசு – 2020
March 25 , 2021
1219 days
596
- இந்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசினை பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானிற்கு வழங்கியுள்ளது.
- 2019 ஆம் ஆண்டிற்கான பரிசு ஓமனின் சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத்திற்கு வழங்கப் பட்டுள்ளது.
- ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்கள் வங்க தேசத்தின் முதல் குடியரசுத் தலைவர் மற்றும் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.
- இவர் அந்நாட்டின் “தேசத் தந்தை” (அ) “முஜிப்” என அழைக்கப்பட்டார்.
- 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இவர் படுகொலை செய்யப்பட்டார்.
- இப்பரிசு இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு சர்வதேச காந்தி அமைதிப் பரிசாகும்.
- இவ்விருது 1995 ஆம் ஆண்டில் மோகன்தாஸ் காந்தியின் 125வது பிறந்தநாள் விழா அன்று தொடங்கப்பட்டது.
- இவ்விருது இனம், தேசம், பாலினம் (அ) சமய நம்பிக்கை என எதையும் சாராமல் அனைத்து நபர்களுக்கும் வழங்கப்படக் கூடியதாகும்.
Post Views:
596