அசாமின் முதலமைச்சர் ஹீமந்தா பிஸ்வ சர்மா அவர்கள் காப்பு அமைச்சர்களை அங்கு நியமித்துள்ளார்.
அம்மாநிலத்தின் அனைத்து 34 மாவட்டங்களிலும் அரசுக் கொள்கைகள், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் இதர பிற நலத் திட்டங்களின் அமலாக்கத்தினை மேற்பார்வையிடுவதற்காக இவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அசாமின் அனைத்து 34 மாவட்டங்களுக்கும் சேர்த்து 13 காப்பு அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் ஆகியவற்றினை அமல்படுத்துவதற்கான பொறுப்பு இவர்களுக்கு வழங்கப் பட்டு உள்ளது.