தமிழ்நாட்டின் சமூக தொழில் முனைவோர் ஒருவர் தனது தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட உணவு மீட்பு அமைப்புக்காக ஆசிய பிராந்தியத்திற்கான காமன் வெல்த் இளையோர் விருதினைப் பெற்றுள்ளார்.
நோ ஃபுட் வேஸ்ட் (No Food Waste) எனும் அமைப்பின் நிறுவனரான பத்மநாபன் கோபாலன் லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகத்தில் இந்த விருதினைப் பெற்றார்.
இவர் மிதமிஞ்சிய உணவுகளை ஓரிடத்திலிருந்துப் பெற்று தேவைப்படுவோர்க்கு வழங்குவதற்கான தனது புத்தாக்க பணியின் மூலம் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கான பட்டினியின்மையை அடைய மேற்கொண்ட பணிக்காக அவருக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது.