TNPSC Thervupettagam

காமன்வெல்த் விளையாட்டு – 2022

February 27 , 2020 1607 days 740 0
  • 2022 ஆம் ஆண்டின் பர்மிங்காம் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தைப் போட்டி ஆகியவை இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு முன்பே நடைபெற உள்ளது.
  • காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பானது இந்த விளையாட்டுப் போட்டிகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் சண்டிகரில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. பிற முக்கிய விளையாட்டுகள் ஜூலை மாதம் பர்மிங்காமில் தொடங்க இருக்கின்றன.
  • இந்தப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டி சேர்க்கப்படா விட்டால் இந்த விளையாட்டுகளைப் புறக்கணிப்பதாக முன்னதாக இந்தியா கூறி இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான அதன் விளையாட்டுத் திட்டத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி அல்லது வில்வித்தைப் போட்டியைச்  சேர்க்க வேண்டாம் என்று பர்மிங்காம் முடிவு செய்தது.
  • இருப்பினும், இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறந்த சாதனை படைத்து, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கோல்ட் கோஸ்ட் விளையாட்டுப் போட்டிகளில் 16 பதக்கங்களை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்