கார்பன்டை ஆக்சைடைச் சேகரிக்கும் இந்தியாவின் முதல் ஆலை
September 20 , 2021 1036 days 647 0
டாடா ஸ்டீல் நிறுவனமாகது இந்தியாவில் முதலாவது கார்பன் டை ஆக்சைடு சேகரிப்பு ஆலையினைத் தொடங்கி உள்ளது.
இது ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலைகளின் ஊது உலை வாயுவிலிருந்து கார்பன் டை ஆக்சைடை நேரடியாகப் பிரித்தெடுக்கிறது.
இந்தச் சாதனையின் மூலம், இத்தகைய கார்பன் சேகரிப்புத் தொழில்நுட்பத்தினை நிறுவிய நாட்டின் முதல் எஃகு ஆலையாக டாடா ஸ்டீல் மாறியுள்ளது.
இந்த ஆலையானது ஒரு நாளைக்கு 5 டன் அளவிலான கார்பன்படை ஆக்சைடைச் சேகரிக்க வல்லது.
இந்த ஆலையானது மலிவு விலையிலான கார்பன் சேகரிப்புத் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணியில் உள்ள கார்பன் கிளீன் என்ற அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.