உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு (ஏப்ரல் 7), உலக சுகாதார அமைப்பானது (WHO) 2022 ஆம் ஆண்டு காற்றின் தரம் குறித்த தரவுத் தளத்தை வெளியிட்டது.
கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து மக்களும் (99%) உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர வரம்புகளை மீறிய காற்றையேச் சுவாசிப்பதாக இது காட்டுகிறது.
உலக சுகாதார அமைப்பானது முதல் முறையாக நைட்ரஜன் டை ஆக்சைட்டின் (NO2) வருடாந்திரச் சராசரிச் செறிவுகளின் நிலமட்ட அளவீடுகளையும் எடுத்துள்ளது.
10 μm (PM10) அல்லது 2.5 μm (PM2.5) என்ற மதிப்பிற்குச் சமமான அல்லது அதை விடச் சிறிய விட்டம் கொண்ட துகள்களின் அளவீடுகளும் இதில் அடங்கும்.
"கிழக்கு மத்தியத் தரைக் கடல் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் மிகவும் மோசமாகவும், அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவிலும் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக" இந்த அறிக்கை கூறுகிறது.
கிழக்கு மத்தியத் தரைக் கடல் பகுதியில் அதிக செறிவுமிக்க நைட்ரஜன் டை ஆக்சைடு காணப் பட்டது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் உள்ள 1 சதவீதத்திற்கும் குறைவான நகரங்களில் காற்றின் தரம் உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரை செய்யப் பட்ட வரம்புகளுக்கு இணங்க உள்ளது.