TNPSC Thervupettagam

காற்று மாசுபாட்டை எதிர்கொள்வதற்காக செயற்கை மழை

November 10 , 2023 253 days 190 0
  • டெல்லியின் தேசியத் தலைநகரப் பிராந்திய அரசாங்கம் ஆனது, காற்று மாசு பிரச்சினையை சமாளிப்பதற்காக நகரத்தில் செயற்கை மழையினை உருவாக்கச் செய்வதற்கான தனது திட்டங்களை அறிவித்துள்ளது.
  • இது மழைப்பொழிவை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபடுத்திகளை அகற்றி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாசு அளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த புதுமையான அணுகுமுறையானது, கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் சமர்ப்பித்த விரிவான திட்டத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • ஒரு நாடு மேக விதைப்புச் சோதனையை இதற்காக மேற்கொள்வது இது முதல் முறை அல்ல.
  • முன்னதாக, சீனா தனது வறண்ட பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவைக் கொண்டு வருவதற்காக இரசாயனத் தண்டுகளை வானில் தூவியது.
  • அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளும் இந்த முறையை மேம்படுத்தி வரும் நாடுகளில் சிலவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்